ADDED : செப் 15, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை 50, பால் கறவையாளராக வேலை செய்தார்.
பால் கறக்கும் தொழிலை முடித்துவிட்டு நேற்று முன் தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோட்டில் மேக்கிழார்பட்டி விலக்கு பாறைகுளம் அருகே எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்லத்துரை பலியானார். மகன் மாரிசாமி புகாரில் கண்டமனூர் டிரைவர் விஜயசேகரன் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.