sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சாரல் மழையால் முருங்கை பூக்கள் உதிர்வு: விவசாயிகள் ஏமாற்றம்

/

சாரல் மழையால் முருங்கை பூக்கள் உதிர்வு: விவசாயிகள் ஏமாற்றம்

சாரல் மழையால் முருங்கை பூக்கள் உதிர்வு: விவசாயிகள் ஏமாற்றம்

சாரல் மழையால் முருங்கை பூக்கள் உதிர்வு: விவசாயிகள் ஏமாற்றம்


ADDED : மார் 13, 2025 05:53 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்ததால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி, கொத்தப்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, ராஜதானி, கணேசபுரம் உட்பட பல கிராமங்களில் முருங்கை சாகுபடி உள்ளது. காற்று, மழை காலங்களில் முருங்கை விளைச்சல் குறையும். கடந்த சில மாதங்களுக்குப் பின் முருங்கையில் பூக்கள் எடுத்து காய்ப்பு துவங்கியது.

இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த இரு நாட்களாக அடுத்தடுத்து சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையால் முருங்கை மரங்களில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டது. இன்னும் சில வாரங்களில் காய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: முருங்கையில் காய்ப்புக்கான சீசன் துவங்கிய நிலையில் சாரல் மழையால் பூக்கள் உதிர்ந்து விட்டது. மீண்டும் பூக்கள் எடுப்பதற்கு சில வாரங்கள் ஆகும். தற்போது முருங்கைக்காய் கிலோ ரூ.50 வரை விலை போகிறது. விலை கிடைக்கும் போது விளைச்சல் பாதிப்பு விவசாயிகளுக்கு கவலை ஏற்படுத்தி விட்டது என்றனர்.






      Dinamalar
      Follow us