ADDED : ஆக 20, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேசிய குடற்புழு நீக்கத்திற்கான முகாம் ஆக.23, விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக., 30ம் துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நடக்க உள்ளது. இதில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு பள்ளிகள் அங்கன்வாடி மையங்களிலும், 20 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 'அல்பெண்ட்சோல்' எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
இதனை பெற்று பயனடையலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

