sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூணாறு அருகே நிலச்சரிவு அபாயம் வெளியேற 23 குடும்பங்களுக்கு நோட்டீஸ்

/

மூணாறு அருகே நிலச்சரிவு அபாயம் வெளியேற 23 குடும்பங்களுக்கு நோட்டீஸ்

மூணாறு அருகே நிலச்சரிவு அபாயம் வெளியேற 23 குடும்பங்களுக்கு நோட்டீஸ்

மூணாறு அருகே நிலச்சரிவு அபாயம் வெளியேற 23 குடும்பங்களுக்கு நோட்டீஸ்

2


ADDED : ஆக 23, 2024 05:43 AM

Google News

ADDED : ஆக 23, 2024 05:43 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: தேவிகுளத்தில் இறைச்சல்பாறை பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு 23 குடும்பங்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.

மூணாறு அருகே தேவிகுளத்தில் இறைச்சல்பாறையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டது.

அதே பகுதியில் மலை மீது நீண்ட விரிசல் ஏற்பட்டது. அதனால் நிலம் சற்று தாழ்ந்து நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

விரிசல் ஏற்பட்ட பகுதியின் கீழ் குடியிருப்புகள் ஏராளம் உள்ளன. அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசிப்பதால், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு 23 குடும்பங்களுக்கு கே.டி.எச்., வி.ஏ.ஓ., நோட்டீஸ் அளித்தார்.

அப்பகுதியை விட்டு சிலர் வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்த நிலையில் பெரும்பாலானோர் வெளியேறவில்லை.

அவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில், தேவிகுளத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எஞ்சியவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us