sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விதிமீறி கட்டுமானம் ஆவணங்கள் தாக்கல் செய்ய நோட்டீஸ்

/

விதிமீறி கட்டுமானம் ஆவணங்கள் தாக்கல் செய்ய நோட்டீஸ்

விதிமீறி கட்டுமானம் ஆவணங்கள் தாக்கல் செய்ய நோட்டீஸ்

விதிமீறி கட்டுமானம் ஆவணங்கள் தாக்கல் செய்ய நோட்டீஸ்


ADDED : செப் 07, 2024 06:48 AM

Google News

ADDED : செப் 07, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு, தேவிகுளம் ஆகிய பகுதிகளில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து நடந்த கட்டுமானங்களை தடுத்து நிறுத்தி அவற்றின் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வருவாய்துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.

இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்பட எட்டு கிராம நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமானங்களுக்கு வருவாய்துறையின் தடையில்லா சான்றிதழ் கட்டாயமாக்கி கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனை மீறி மூணாறு உள்பட பல பகுதிகளில் கட்டுமானங்கள் நடந்து வருகின்றன.

அது குறித்து வருவாய்துறை சிறப்பு குழு மூணாறு உள்பட பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதில் மூணாறில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விதிமீறி எம்.ஜி., காலனி உள்பட மூன்று இடங்களிலும், தேவிகுளத்தில் இரண்டு இடங்களிலும் கட்டுமானங்கள் நடந்தது. அவற்றை, தேவிகுளம் சிறப்பு தாசில்தார் ஹரிகுமார் தலைமையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சம்பந்தப்பட்ட கட்டுமானங்கள் தொடர்பான ஆவணங்களை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அளித்தனர்.






      Dinamalar
      Follow us