ADDED : மே 12, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே சில்லம்பரத்துப்பட்டி பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் காமராஜ் 62.
இவர் வீட்டின் அருகே கோழிப் பண்ணை வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை கோழிப் பண்ணைக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்தது. போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் நிலையில் இறந்தார். போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.