ADDED : ஆக 29, 2024 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி அருகே நாகம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் 45. எழுவனம்பட்டி தனியார் மில்லில் கூலி வேலை செய்து வந்தார். டூவீலரில் பெரியகுளம் நோக்கி செல்லும் போது,
நஞ்சாவரம் கண்மாய் அருகே பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெருமாள் இறந்தார். விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் பாஸ்கரனை 48. வடகரை போலீசார் கைது செய்தனர்.