ADDED : ஜூலை 09, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கடமலைக்குண்டைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 70. இவர் கூடலுார் அருகே தம்மணம்பட்டி கழுதை மேட்டில் தோட்ட வேலை செய்து வந்தார்.
நேற்று முன் தினம் இரவு கூடலுாரிலிருந்து தம்மணம்பட்டி நோக்கி டூவீலரில் சென்றபோது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
டிரைவர் பிரசாத் மீது தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.