ADDED : ஜூன் 02, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி சோலைமலை அய்யனார் கோயில் தெரு பெருமாள் 38, டைல்ஸ் கடையில் வேலை செய்தார். இவரது நண்பர் பாராஸ்ட் ரோடு வீரசங்கர் 30. இருவரும் தேனி மதுரை ரோடு பங்களா மேட்டில் டூவீலரில் சென்றனர்.
டூவீலரை ஒட்டிய பெருமாள் வாகனத்தை திரும்பியபோது தடுமாறி விழுந்தார். இருவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர்.
பெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பெருமாளின் தந்தை வேலுச்சாமி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.