ADDED : மார் 25, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் ஹரிஸ்குமார் முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர்.

