sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுவர்களில் சின்னம் வரைவதில் கட்சிகளிடம் ஆர்வம் இல்லை

/

சுவர்களில் சின்னம் வரைவதில் கட்சிகளிடம் ஆர்வம் இல்லை

சுவர்களில் சின்னம் வரைவதில் கட்சிகளிடம் ஆர்வம் இல்லை

சுவர்களில் சின்னம் வரைவதில் கட்சிகளிடம் ஆர்வம் இல்லை


ADDED : மார் 23, 2024 06:06 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் முழு வீச்சில் களம் காண வியூகம் வகுத்து வருகின்றனர். தேர்தல் பரப்புரையில் சுவர்களில் சின்னங்கள் வரைவது கட்சிகளின் பிரதான பணியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல்களில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சுவர்களில் ரிசர்வ் என்று எழுதி இடம் பிடிப்பார்கள்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள் தான். பேரூராட்சிகள் , நகராட்சிகளில் சுவர்களில் சின்னங்கள் வரைவது தடை செய்யப்பட்டு விட்டது. கிராமங்களில் வரைந்து கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரின் சம்மத கடிதம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. செயலி ஒன்றில் விண்ணப்பத்தை அப்லோடு செய்ய கூறுகின்றனர். இந்த சிக்கல்களை நினைத்து இதுவரை யாருமே விண்ணப்பிக்கவில்லை.

இதனால் பேரூராட்சி, நகராட்சி போன்று ஊராட்சிகளிலும் சுவர்கள் பளீச் என்று உள்ளது.






      Dinamalar
      Follow us