sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்

/

அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்

அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்

அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்


ADDED : ஆக 09, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே சிலமலை மயானத்தில் தண்ணீர், மின்வசதி, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி அருகே சிலமலை ஊராட்சி பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சிலமலை வடக்கு பகுதியில் உள்ள பொது மயானத்திற்கு செல்ல ரோடு வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இறந்தவர்களுக்கு மயானத்தில் இறுதி சடங்கு செய்ய தண்ணீர் வசதி இல்லாததால் நீண்ட தூரம் சென்று தோட்ட கிணற்று தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எரியூட்டு மையம் இல்லாததால் திறந்த வெளியில் எரியூட்டி வருகின்றனர். மழை காலங்களில் பொதுமக்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட நிழற்குடை வசதி இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மின்வசதி, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us