/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெட்டிக்கடை அளவில் தகரத்தில் பயணிகள் நிழற்கூரை அமைப்பு பெரியகுளம் பொதுமக்கள் எதிர்ப்பு
/
பெட்டிக்கடை அளவில் தகரத்தில் பயணிகள் நிழற்கூரை அமைப்பு பெரியகுளம் பொதுமக்கள் எதிர்ப்பு
பெட்டிக்கடை அளவில் தகரத்தில் பயணிகள் நிழற்கூரை அமைப்பு பெரியகுளம் பொதுமக்கள் எதிர்ப்பு
பெட்டிக்கடை அளவில் தகரத்தில் பயணிகள் நிழற்கூரை அமைப்பு பெரியகுளம் பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 22, 2024 03:16 AM

பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் நல்ல நிலையில் இருந்த கான்கீரிட்டால் ஆன பயணிகள் நிழற்கூரையை அகற்றி விட்டு தற்போது எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் தகர ெஷட்டில் பெட்டிக்கடை சைசில் சிறிய அளவில் நிழற்கூரை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் நகராட்சி தென்கரை மூன்றாந்தலில் இருபுறமும் பல ஆண்டுகளாக கான்கிரீட் நிழற் கூரை இருந்தது. திண்டுக்கல்- குமுளி மாநில சாலையில் சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை அனுமதியுடன் 15 ஆண்டுகளுக்கு முன் நன்கொடையாளரால் கட்டடப்பட்டு நன்கு பயன்பாட்டில் இருந்த பயணிகள் நிழற்கூரையை இடித்து அகற்றினர். இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்த போது ,' கூடுதல் வசதியுடன் நிழற்கூரை அமைக்கப்படும்' என நகராட்சி நிர்வாகத்தினர் சமாளித்தனர்.
பயணிகள் நிழற்கூரை இன்றி பல மாதங்களாக அவதிப்பட்டனர். இந்நிலையில் மூன்றாந்தலில் பெரியகுளம் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் அவசர, அவசரமாக தகரத்திலான பயணிகள் நிழற்கூரை அமைக்கப்படுகிறது. இதில் மழை,வெயிலுக்கு நான்கு பேர் ஒதுங்கி நிற்க முடியாத அளவிற்கு பெட்டிக்கடை அளவில் நிழற்கூரை அமைக்கின்றனர்.
சிறு கிராமங்களில் கூட பயணிகள் நிழற்கூரை கான்கீரிட்கட்டடம் கட்டி வரும் நிலையில் நகராட்சி பகுதியில் தினமும் நுாற்றுக்கான பஸ்கள், ஆயிரகணக்கான பயணிகள் வந்து செல்லும் இடத்தில் பெட்டிக்கடை அளவில் தகரத்தில் நிழற்கூரை அமைப்பதற்கு பொதுமக்கள் அதிருப்பதி அடைந்துள்ளனர்.
நிழற்கூரை இடத்தில் உள்ள கடைக்காரர்களுக்கு ஆதரவாக பயணிகள் நிழற்கூரையை சுருக்கி கட்டுவதாக புகார் கூறுகின்றனர்.
எனவே, பயணிகளுக்கு உண்மையில் பயன்படும் வகையில் நெடுஞ்சாலை துறை அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே உள்ளது போல் கான்கீரிட் கட்டடத்தினாலான பயணிகள் நிழற்கூரை அமைத்து மின் விளக்கு வசதி செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. -