sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு

/

கம்பம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு

கம்பம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு

கம்பம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு


ADDED : ஆக 13, 2024 12:34 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கம்பம் சிக்காளி குளம் ஓடை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் ம அளித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 283 மனுக்கள் வழங்கினர்.

கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலையில் குறைதீர் கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், கலெக்டர் நேர்முக உதவியாளர்(கணக்கு) முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உத்தமபாளையம் தாலுகா, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 6 வார்டை சேர்ந்த முருகன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், 'தனியார் அலைபேசி நிறுவனத்திற்காக பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்கும்பணி நடக்கிறது.

இதனால் பொதுமக்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. டவரை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரினர்.

ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் முருகன், உமையராஜன், கடமலைக்குண்டு கிராம நலக்கமிட்டி நிர்வாகிகள் வழங்கிய மனுவில், 'கடமலைகுண்டு கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு செல்லும் பாதையை பக்தர்கள், விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தனியார் சிலர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரினர்.

கம்பம் சிக்காளிகுளம் ஒடை பகுதி விவசாயி பார்த்தீபன், பகவதிராஜ் ஆகியோர் வழங்கிய மனுவில், 'சிக்காளி குளம் ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு சென்றுவந்தோம்.

விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் எடுத்து செல்லவும், அறுவடை செய்த பொருட்களை கொண்டு வந்தோம்.

சிலர் ஓடை ஆக்கிரமித்தனர். இதனால் விவசாய நிலங்களுக்கு சென்று வர இயலாத சூழல் உருவாகி உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினர்.






      Dinamalar
      Follow us