sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அத்தியூத்து இலங்காவரிசை ரோடு வசதி கோரி கலெக்டரிடம மனு

/

அத்தியூத்து இலங்காவரிசை ரோடு வசதி கோரி கலெக்டரிடம மனு

அத்தியூத்து இலங்காவரிசை ரோடு வசதி கோரி கலெக்டரிடம மனு

அத்தியூத்து இலங்காவரிசை ரோடு வசதி கோரி கலெக்டரிடம மனு


ADDED : ஜூன் 13, 2024 06:49 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: அத்தியூத்து - இலங்காவரிசை கிராமத்திற்கு ரோடு வசதி கோரி போடி,சோலையூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.

போடி அருகே சோலையூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆர்.டி.ஓ., தாட்சாயிணி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் பட்டா மாறுதல், பட்டா பெறுதல், முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை வழங்கள், மகப்பேறு பெட்டகம், வேளாண் பண்ணைக் கருவிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உட்பட 56 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மலைக் கிராமமான அத்தியூத்து - இலங்காவரிசை ரோடு வசதி, ரேஷன் கார்டு, கல்வி, முதியோர் உதவித் தொகை, பட்டா கேட்டு விவசாயிகள் உட்பட 76 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன. வேளாண், போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us