தேனி: விபத்தில் ஒருவர் காயம்
தேனி: போடி மல்லிங்காபுரம் நடுத்தெரு துர்கேஸ்வரன் 27. இவரது தந்தை சுப்புராஜ் 52. இவர் கோழி இறைச்சி வாங்குவதற்காக தனது டூவீலரில் டொம்புச்சேரி சென்றார். தேவாரம் தேனி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே டூவீலர் சென்ற போது, தேனி ரத்தினம் நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்த குமரேசன் 48, ஓட்டிவந்த கார் பின்புறமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் சுப்புராஜ் பலத்த காயமடைத்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி சேர்க்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி மாயம்
தேனி: அண்ணாநகர் மூதாட்டி கன்னியம்மாள் 72. இவரது மகன் முருகன் 51. இவர் தனது தாய் கன்னியம்மாளை தேனி அரண்மனைப்புதுார் வயல்பட்டியில் உள்ள தங்கை வீட்டிற்கு செல்ல பஸ்சில் அனுப்பினார். பல நேரம் ஆன பின்பும் தாய் வீட்டிற்கு வரவில்லை. மகன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
இருதரப்பு தகரகாறு
ஐவர் மீது வழக்கு
தேனி: கோட்டூர் காமராஜர் காலனி வினிதா 29. இவரது கணவர் ஜெகதீஸ்பாண்டியன் 34. இவர் தேனியில் மெட்ரிக் பள்ளியில் டிரைவராக பணிபுரிகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பொன்மாரி, சுமித்தியாவிற்கு முன்விரோதம் இருந்தது. கடந்த ஆக., 3ல் இரவு தனது மாமியார் வீட்டில் இருந்த பிள்ளையை துாக்கச் சென்றார். அப்போது அவரை மறித்த பொன்மாரி, சுமித்தியா இந்தத் தெருவில் ஏன் வருகிறார் என கூறி, தமிழன், சுமித்தியா அவரது கணவர் வசந்த் ஆகியோர் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயம்பட்ட ஜெகதீஸ்பாண்டியன் தேனி மருத்தவக் கல்லுாரி சிகிச்சையில் உள்ளார். பாதிக்கப்பட்டவரின் மனைவி வினிதா புகாரில் பொன்மாரி, அவரது கணவர் உட்பட நால்வர் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இப்பிரச்னையில் சுமித்தியா புகாரில் ஜெகதீஸ்பாண்டியன் மீது வீரபாண்டி போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.