/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு..
/
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு..
ADDED : ஆக 02, 2024 06:57 AM

போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
பெரியகுளம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆடி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஞானாம்பிகை, சிவன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் இந்திராபுரித்தெருவில் தையல்நாயகி, சிவனேஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் அதிகாரநாகராஜருக்கும்,
நந்தி பகவானுக்கும் 108 லிட்டர் பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன்உட்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகாஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.