ADDED : மார் 07, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மோகன் காந்தி 40. இவரது மனைவி சரண்யா 32. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் காந்தி தேனியில் தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்தார்.
இவர் குடித்து விட்டு மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இதனை மனைவி மற்றும் அவரது தாயார் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மோகன் காந்தி வீட்டின் மேல் மாடியில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.