/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி திருவிழா கொடியேற்றம் ஆக.17 ல் தேரோட்டம் நடக்கிறது
/
ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி திருவிழா கொடியேற்றம் ஆக.17 ல் தேரோட்டம் நடக்கிறது
ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி திருவிழா கொடியேற்றம் ஆக.17 ல் தேரோட்டம் நடக்கிறது
ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி திருவிழா கொடியேற்றம் ஆக.17 ல் தேரோட்டம் நடக்கிறது
ADDED : ஆக 10, 2024 06:44 AM

உத்தமபாளையம் : ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் தேரோட்டம் ஆக., 1.7. ல் நடைபெறுவதை ஒட்டி நேற்று மாலை சர்ச் வளாகத்தில் கொடியேற்றம் நடந்தது.
ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் 1902ல் கட்டப்பட்டது. இந்த சர்ச் மிக பழமையும், பிரசித்தி பெற்றது. இங்குள்ள வெண்கல மணி ஆயிரம் கிலோ எடை கொண்டது. பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பனிமய மாதா சர்ச்சுகளில் ஆகஸ்டில் அன்னை தேர்ப்பவனி நடைபெறும். ராயப்பன்பட்டியில் இதுவரை மாதா ஊர்வலம் சப்பரத்தில் வைத்து டிராக்டரில் ஊர்வலம் நடைபெற்றது. தற்போது ரூ.40 லட்சம் செலவில் 29 அடி உயரத்தில் 7 டன் எடையுள்ள மரத்திலான தேர் புதிதாக செய்யப்பட்டுள்ளது. தேர் கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது.
தேர்ப்பவனி விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை சர்ச் வளாகத்தில் நடந்தது. பாதிரியார் ஞானப்பிரகாசம் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம கமிட்டி தலைவர் பிரபாகர், கிராம கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இசையமைப்பாளர் சாம் இசையில் சேவியர் பீட்டர் எழுதிய பாடல் கேசட் வெளியிடப்பட்டது. நிர்வாகி ஜேம்ஸ் ஜாய் ஸ்டான்லி இதற்கான ஒருங்கிணைப்பை செய்தார்.
123 ஆண்டுகளில் முதன் முறையாக மரத்திலான தேர் புதிதாக செய்து தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆக., 17 மாலை பனிமயமாதா தேர்ப் பவனியை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.