/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
/
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 31, 2024 01:43 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 913 கன அடியாக அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழையின்றி நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 28.4 மி.மீ., பெரியாறில் 41 மி.மீ., மழை பதிவானது. இதனால் வினாடிக்கு 405 கன அடியாக இருந்த நீர்வரத்து 913 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் சற்று உயர்ந்து 130 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக 400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4708 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் அவ்வப்போது மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 4 நாட்கள் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் 136 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.