sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முல்லைப் பெரியாறு அணையில் இரண்டரை மாதத்திற்குப்பின் மழை

/

முல்லைப் பெரியாறு அணையில் இரண்டரை மாதத்திற்குப்பின் மழை

முல்லைப் பெரியாறு அணையில் இரண்டரை மாதத்திற்குப்பின் மழை

முல்லைப் பெரியாறு அணையில் இரண்டரை மாதத்திற்குப்பின் மழை


ADDED : மார் 02, 2025 03:03 AM

Google News

ADDED : மார் 02, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் இரண்டரை மாதத்திற்குப் பின் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் உயருமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது.

2024 டிச.13ல் முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியான பெரியாறில் 101 மி.மீ., தேக்கடியில் 108 மி.மீ., மழை பெய்தது.

இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 651 கன அடியாக அதிகரித்தது.

நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து 130 அடியை எட்டியது. அதன் பின் மழை தொடராமல் நீர்மட்டம் குறையத் துவங்கி நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 115.50 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இந்நிலையில் இரண்டரை மாதத்திற்குப் பின் நேற்று பெரியாறில் 2.4 மி.மீ., தேக்கடியில் 3.2 மி.மீ.,மழை பெய்தது. இதனால் 92 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாகுபடிக்காக 400 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

நீர் இருப்பு 1817 மில்லியன் கன அடியாகும். பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்து நீர்மட்டம் உயருமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us