/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராமநாதபுரம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
/
ராமநாதபுரம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
ராமநாதபுரம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
ராமநாதபுரம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
ADDED : மே 15, 2024 08:40 PM
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 10:15 மணிக்கு நிறுத்தப்பட்டது.
வைகை பூர்வீக பாசனப் பகுதி 3ல் உள்ள கண்மாய்களில் தேங்கும் விதமாக மே 11ல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று நிறுத்தப்பட்டது.
நீர்ப்பாசனத் துறையினர் கூறியதாவது: கடந்த 5 நாட்களில் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 50.66 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறற்றப்படுகிறது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 68 கன அடியாக இருந்தது என தெரிவித்தனர்.