/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் நீர் திறப்பு
/
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் நீர் திறப்பு
ADDED : ஆக 18, 2024 02:23 AM
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு 6 நாட்களுக்குப் பின் நேற்று மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது.
பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் வைகை அணையில் நீர் திறந்து விடப்பட்டது. சில நாட்களாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து திறக்கப்பட்ட நீர் ஆக. 11ல் நிறுத்தப்பட்டது. நேற்று காலை 6:00 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி வீதம் கால்வாய் வழியாக மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம் போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 63.09 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). அணைக்கு வினாடிக்கு 2100 கனஅடி நீர் வரத்து உள்ளது.