sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்: அச்சத்தில் பெற்றோர்கள்

/

பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்: அச்சத்தில் பெற்றோர்கள்

பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்: அச்சத்தில் பெற்றோர்கள்

பள்ளி மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்: அச்சத்தில் பெற்றோர்கள்


ADDED : மார் 13, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுாரில் பள்ளி செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தினந்தோறும் காலை, மாலையில் நெடுஞ்சாலையில் நடந்து வரும்போது டூவீலர்களில் உலா வரும் ரோமியோக்கள் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் சிலர் முக்கிய சந்திப்பில் நின்று கடந்து செல்லும் மாணவிகளை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஒரு சில மாணவிகள் தங்களது வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் பயத்தில் இதை மறைத்து விடுகின்றனர். தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவிகள் படிப்பில் ஒரே கவனத்துடன் சென்று வருகின்றனர். இதில் இந்த ரோமியோக்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்பி தொந்தரவு கொடுப்பதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாண்ட், காமாட்சியம்மன் கோயில் தெரு, பொம்மச்சி அம்மன் கோயில் தெரு, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us