/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தூர்வாரப்படாத மந்தை ஓடையால் சுகாதாரக்கேடு
/
தூர்வாரப்படாத மந்தை ஓடையால் சுகாதாரக்கேடு
ADDED : செப் 09, 2024 05:52 AM

போடி : போடி அருகே ராசிங்காபுரம் மந்தை ஓடை தூர்வாரப்படாததால் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு நிலவுகிறது.
ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது குளத்துப்பட்டி. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் இருந்து குளத்துப்பட்டி செல்லும் ரோட்டில் மந்தை ஓடைப்பகுதி அமைந்து உள்ளது.
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் முட்புதர்கள் சூழ்ந்து உள்ளன. இதனால் மழைநீர் சீராக செல்ல முடியாததால் குப்பைகளை கொட்டுவதால் கழிநீர் ஓடையில் தேங்குகிறது.
இதன் அருகே குடியிருப்புகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.
ஓடையில் தேங்கிய கழிவு நீரால் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையால் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மக்களின் சிரமங்களை தவிர்க்க ஓடை பகுதியை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றி மழைநீர் சீராக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.