sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வந்த மாணவர்கள்

/

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வந்த மாணவர்கள்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வந்த மாணவர்கள்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வந்த மாணவர்கள்


ADDED : ஜூன் 11, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள் 530, உதவி பெறும் பள்ளிகள் 216, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 20, தனியார் பள்ளிகள் 174 உள்ளன.

பள்ளிகளுக்கு முழு ஆண்டுத்தேர்வு முடிந்து கடந்த ஏப்ரலில் கோடை விடுமுறை விடப்பட்டது. பின் பள்ளிகள் ஜூன் 4ல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதிக வெயில் காரணமாக நேற்று திறக்கப்பட்டது.

நேற்று மாணவர்கள் பெற்றோர்களுடன் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். முதல் நாளிலேயே மாணவர்களுக்கு அரசின் இலவச பாடபுத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பாலார்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதையுடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வரவேற்றனர். தேனி டி.எம்.ஹெச்.என்.யூ., வித்யாலயா பள்ளியில் மாணவர்களை வரவேற்று செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டிருந்தது.

அதில்பெற்றோருடன் செல்பி எடுத்து வகுப்புகளுக்கு சென்றனர். இறை வணக்கத்திற்கு பின் வகுப்புகள் துவங்கின.கல்வித்துறையினர் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

நலத்திட்டங்கள் வழங்குவதால் ஒன்றாம் வகுப்பு, 6ம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. என்றனர்.






      Dinamalar
      Follow us