sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இருவர் சொந்தம் கொண்டாடிய விடுதிக்கு ' சீல்'

/

இருவர் சொந்தம் கொண்டாடிய விடுதிக்கு ' சீல்'

இருவர் சொந்தம் கொண்டாடிய விடுதிக்கு ' சீல்'

இருவர் சொந்தம் கொண்டாடிய விடுதிக்கு ' சீல்'


ADDED : ஜூன் 21, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே வட்டவடையில் தனியார் தங்கும் விடுதிக்கு இருவர் சொந்தம் கொண்டாடியதால் கலெக்டர் பூட்டி ' சீல்' வைத்தார்.

வட்டவடை, கோவிலூரில் கோட்டயத்தைச் சேர்ந்தவருக்கு 85 சென்ட் நிலமும் தங்கும் விடுதியும் இருந்தது. அதனை ஆலுவாவைச் சேர்ந்தவருக்கு 2019ல் விற்றார். அதற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்ததுடன் மீதி தொகையை பத்திர பதிவு முடிந்ததும் அதனை வைத்து வங்கியில் கடன் பெற்று தருவதாக இருவரிடையே ஒப்பந்தமானது.

அதன்படி மீதி தொகையை வழங்காததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதனிடையே பத்திர பதிவை ரத்து செய்யுமாறு கோட்டயத்தைச் சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தார்.

ஆனால் ஒப்பந்தபடி முழு தொகையும் கொடுத்த பிறகு பத்திர பதிவு நடந்ததாக கூறி ஆலுவாவைச் சேர்ந்தவர் தங்கும் விடுதிக்கு சொந்தம் கொண்டாடியதால் பிரச்னை முற்றியது.

ஆகவே ஆவணங்களை பரிசோதித்து உரிமையாளர் யார் என்பது தெரியும் வரை நிலம், தங்கும் விடுதி ஆகியவற்றை கையகப்படுத்தி இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் ' சீல்' வைத்தார். அங்கு தேவிகுளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us