sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

லோக் அதாலத் மூலம் 505 வழக்குகளுக்கு தீர்வு

/

லோக் அதாலத் மூலம் 505 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் மூலம் 505 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் மூலம் 505 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : செப் 17, 2024 04:34 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தம பாளையம்: உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த லோக் அதாலத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத 505 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதியுமான சிவாஜி செல்லையா தலைமை வகித்தார்.

உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் இந்த அமர்வை பகிர்ந்து கொண்டனர். சமரச தீர்வுக்கான விசாரணையில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், குடும்ப பிரச்னை, காசோலை மோசடி வழக்குகள், அசல் வழக்குகள், மேல் முறையீடு வழக்குகள், பிணை கைதிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டு அபராதம் கட்டுதல் என மொத்தம் 505 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

தீர்வுத் தொகையாக ரு.3 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 602க்கு உத்தரவு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சட்ட உதவி மையத்தின் இளநிலை நிர்வாக உதவியாளர் சசிதர் செய்திருந்தார்.

நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us