/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒட்டுநர் தேர்வு தளம் இன்றி லைசென்ஸ் பெறுவோர் அவதி இடம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
/
ஒட்டுநர் தேர்வு தளம் இன்றி லைசென்ஸ் பெறுவோர் அவதி இடம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
ஒட்டுநர் தேர்வு தளம் இன்றி லைசென்ஸ் பெறுவோர் அவதி இடம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
ஒட்டுநர் தேர்வு தளம் இன்றி லைசென்ஸ் பெறுவோர் அவதி இடம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
ADDED : ஆக 23, 2024 05:48 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒட்டுநர் தேர்வு தளம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒதுக்கீடு செய்த நிலத்தை கையகப்படுத்துவதில் வருவாய்த் துறை சுணக்கம் காட்டி வருகிறது.
மாவட்டத்தில் தேனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், உத்தமபாளையத்தில் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. உத்தமபாளையத்தில் 23 ஆண்டுகளுக்கு முன் இந்த அலுவலகம் துவக்கப்பட்டது. உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தரைத் தளத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு 'டெஸ்ட் டிராக்' எனும் ஒட்டுநர் தேர்வு தளம் 0.5 ஏக்கரில் இருக்க வேண்டும், தினமும் காலையில் டூவீலர், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களுக்கான ஒட்டுநர் லைசென்ஸ் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வாகனத்தை ஒட்டி காண்பிக்க வேண்டும். அந்த தேர்வு தளத்தில் உரிய வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உத்தமபாளையத்தில் 23 ஆண்டுகளாக தனியார் நிலத்தில் ஒட்டுநர் தேர்வு தளம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 50 க்கும் குறையாத பொதுமக்கள் இங்கு லைசென்ஸ் பெற ஒட்டி காட்ட வருகின்றனர். இங்குள்ள டெஸ்ட் டிராத்தில் மழை பெய்தால் மண் தரையில் வாகனங்களை செலுத்த முடியாது. வட்டார போக்குவரத்து அலுவலகம், தேர்வு தளம் அமைக்க கோம்பை ரோடு சிக்கச்சியம்மன் கோயில் அருகில் 5 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பஞ்சமி நிலம் என பிரச்னை கிளம்பி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் டி.ஆர்.ஒ. இடத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இடத்தை முறைப்படி எடுக்க முடியாமல் வட்டார போக்குவரத்து துறை திணறி வருகிறது. வருவாய்த் துறையும் இந்த விவகாரத்தில் சுணக்கம் காட்டி வருகிறது.
இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேர்வு தளம் அமைக்க முடியாமல் இழுபறி நிலை உள்ளது. இந்நிலையில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்ய முதற்கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.