sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியில் சுணக்கம்

/

புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியில் சுணக்கம்

புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியில் சுணக்கம்

புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியில் சுணக்கம்


ADDED : ஏப் 26, 2024 01:06 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: காமயகவுண்டன்பட்டி, சின்னமனுார் உள்பட பல ஊர்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளது.

மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சாரம் தடையின்றி சரியான மின் அழுத்தத்தில் சப்ளை செய்ய மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

தேனி மின்பகிர்மான வட்டத்தில் வண்ணாத்தி பாறை, கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சின்ன ஒவுலாபுரம், காமாட்சிபுரம், அன்னஞ்சி, பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன.

மாவட்டத்தில் சின்னமனூரில் புதிய துணை மின் நிலையம் அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சின்ன ஒவுலாபுரம் கிராம ஊராட்சியில் கூட துணை மின் நிலையம் அமைத்த வாரியம், சின்னமனூர் நகராட்சியில் துணை மின் நிலையம் அமைப்பதில் ஏனோ மெத்தனமாக உள்ளது.

அதே போல அனுமதி வழங்கி பல ஆண்டுகளை கடந்தும், இடத் தேர்வு முடிந்தும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியிலும் துணை மின் நிலையம் அமைப்பதில் வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் உள்ளனர்.

தேனி மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us