sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வசந்த காலத்தை வரவேற்று தபால் தலை கண்காட்சி

/

வசந்த காலத்தை வரவேற்று தபால் தலை கண்காட்சி

வசந்த காலத்தை வரவேற்று தபால் தலை கண்காட்சி

வசந்த காலத்தை வரவேற்று தபால் தலை கண்காட்சி


ADDED : பிப் 26, 2025 06:08 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கோட்ட தபால்துறை சார்பில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், பூக்கள், தாவரங்களின் அழகை காட்சிப்படுத்தவும், இயற்கையுடன் ஆழமான தொடர்பை வளர்க்க வசந்த விழா நடந்து வருகிறது.

இதனை முன்னிட்டு தேனி தலைமை தபால் நிலையத்தில் வசந்த கால மலர் அலங்காரம், போஸ்டர்கள், செல்பி பதாகைகள், தபால்தலை கண்காட்சி, மலர் கண்காட்சி அமைக்கப்பட்டன. கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்தார். துணை கோட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், தபால் நிலைய அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தின் டீன் ராஜாங்கம் பங்கேற்று, வசந்தகாலத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தபால் தலைகள், வசந்த காலத்தில் மலரும் பூக்கள்காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். ஸ்ரீரோஸி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கடிதம் எழுதும் போட்டி நடந்தது. ஏற்பாடுகளை எழுத்தர் நாகராஜ் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us