ADDED : ஆக 06, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கோடங்கிபட்டியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது.
இங்கு 70 மாணவர்கள் படிக்கின்றனர். உறைவிடப்பள்ளியை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் ஆய்வு செய்தார். ஆய்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, இருப்பு பதிவேடு, மதிய உணவு மாதிரி, வகுப்பறை வசதிகள், விடுதி சுகாதாரம், கல்வி கற்பித்தல் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், குழந்தைகள் காப்பக இயக்குனர் பால்பாண்டி உடனிருந்தனர்.