ADDED : மே 02, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்குஉட்பட்டபகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காததால் தெருக்கள் இருளில் முழ்குவது தொடர்கிறது.இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
அதில் 5 வதுவார்டுக்கு உட்பட்ட கிணற்றுத்தெரு, பாண்டிநகர் குறுக்குத்தெரு பகுதிகளில் சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். தெருவிளக்குள் எரிய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

