/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முட்செடிகள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் நீரை தேக்க முடியாமல் மேலச்சொக்கநாதபுரம் விவசாயிகள் பரிதவிப்பு
/
முட்செடிகள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் நீரை தேக்க முடியாமல் மேலச்சொக்கநாதபுரம் விவசாயிகள் பரிதவிப்பு
முட்செடிகள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் நீரை தேக்க முடியாமல் மேலச்சொக்கநாதபுரம் விவசாயிகள் பரிதவிப்பு
முட்செடிகள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கும் சங்கரப்பன் கண்மாய் நீரை தேக்க முடியாமல் மேலச்சொக்கநாதபுரம் விவசாயிகள் பரிதவிப்பு
ADDED : மே 30, 2024 03:52 AM

போடி: போடி அருகே சங்கரப்பன் கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாராததால் முட்கள், ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சங்கரப்பன் கண்மாய். குரங்கணி பகுதியில் பெய்யும் மழை நீர் கொட்டகுடி ஆறு வழியாக பங்காருசாமி கண்மாய்க்கு நீர் வருகிறது.
இக் கண்மாய் நிரம்பி அருகே உள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய் வந்தடைகிறது.
கண்மாயில் தேங்கும் தண்ணீர் 1300 ஏக்கருக்கு நேரடியாகவும், 400 ஏக்கருக்கு மேல் கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து மறைமுகமாக பாசன வசதி பெறும்.
தற்போது கொட்டகுடி ஆற்றில் இருந்து கண்மாய்க்கு நீர் வரும் அணைப்பிள்ளையார் கோயில் அணைப்பகுதி, கொட்டகுடி ஆறு, ராஜவாய்க்கால் ஆற்று பகுதியின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதால் தற்போது மழை பெய்தும் சங்கரப்பன் கண்மாயில் தண்ணீரை முழுவதுமாக தேக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்
உதயகுமார், விவசாயி, மேலச்சொக்கநாதபுரம்: சங்கரப்பன் கண்மாயில் தண்ணீர் முழுவதும் தேங்கி 13 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கண்மாயை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது.
இக்கண்மாய் துார்வாரப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் முட்கள், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து கண்மாயில் மழைநீர் முழுவதும் தேக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, முழுமையாக சாகுபடி செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். விவசாயிகள் பயன் பெறும் வகையில் கண்மாயில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்தவும், கொட்டகுடி ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு வசதி தேவை
சி.பாண்டியன், விவசாயி, மீனாட்சிபுரம்: இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் அருகே உள்ள மீனாட்சியம்மன் கண்மாய்க்கும் நீர் செல்கிறது.
இதன் மூலம் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
கண்மாயில் முட்செடிகள் வளர்ந்து இருப்பதோடு தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
கரையை சுற்றி கருங்கற்களால் ஆன தடுப்பசுவர் இல்லை.
மேலச்சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருந்து கண்மாய் முடியும் வரை ரோடு வசதி இல்லை. கண்மாய் நீர்வரத்துக்கான ஓடை, பாலம் வசதி இல்லாததனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால் ஆட்டோ டூவீலரில் விளை பொருட்களை கொண்டு வரவும், தளவாடப் பொருட்களைக் கொண்டு செல்லவும் முடியாத நிலையில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கண்மாய் ராஜ வாய்க்கால் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரையை மேம்படுத்துவதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.
விளை பொருட்களை கொண்டு வர ரோடு வசதி அமைத்து தர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.