/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதையில் இறந்தவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்பு
/
போதையில் இறந்தவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : ஆக 06, 2024 05:38 AM
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி தெற்குதெருவைச் சேர்ந்தவர் மருதை 55. இவரது மனைவி ராஜாத்தி 50. இவர்களுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மருதைக்கு மது பழக்கத்தால், கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு 10 ஆண்டுகளாக ராஜாத்தி ஜி.கல்லுப்பட்டியிலும், மருதை பெரியகுளம் அழகர்சாமிபுரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகமாக மது குடித்ததால் மருதை உள்புறமாக தாழிட்டு வீட்டிற்குள் இருந்தார். மருதை உறவினர் வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து கதவை உடைத்து, இறந்து கிடந்த மருதை உடலை மீட்டனர்.
--