sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது; மாநில அளவில் 5 இடங்கள் பின் தங்கியது

/

மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது; மாநில அளவில் 5 இடங்கள் பின் தங்கியது

மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது; மாநில அளவில் 5 இடங்கள் பின் தங்கியது

மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது; மாநில அளவில் 5 இடங்கள் பின் தங்கியது


ADDED : மே 15, 2024 07:08 AM

Google News

ADDED : மே 15, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 1.39 சதவீதம் குறைந்தது. கடந்தாண்டு மாநில அளவில் 19வது இடம் பிடித்த நிலையில் இந்தாண்டு 24 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வினை 141 பள்ளிகளைச் சேர்ந்த 6432 மாணவர்கள், 6881 மாணவிகள் என 13,313 பேர் எழுதினர். இதில் 5521 மாணவர்கள், 6471 மாணவிகள் என 11,992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.84 சதவீதம், மாணவிகள் 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.08 சதவீதம் ஆகும். இதில் அரசு, ஆதிதிராவிடர் நலத்துறை, உதவிபெறும், கள்ளர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. நகராட்சி, பகுதி உதவி பெறும், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 90 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகளில் படித்த 812 பேர் உட்பட 1321 பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்தாண்டு 91.47 தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் 19வது இடம் பெற்ற நிலையில், இந்தாண்டு 24வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்பாடத்தில் 670 பேர், ஆங்கிலத்தில் 620 பேர் தோல்வியடைந்தனர். மாவட்டத்தில் 4 அரசுப்பள்ளிகள் உட்பட 26 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 15 பாடங்களில் 393 மாணவர்கள் சதம் எடுத்தனர்.






      Dinamalar
      Follow us