sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எலுமிச்சை பழம் ரூ.15க்கு விற்பனை வரத்து குறைவால் விலை எகிறியது

/

எலுமிச்சை பழம் ரூ.15க்கு விற்பனை வரத்து குறைவால் விலை எகிறியது

எலுமிச்சை பழம் ரூ.15க்கு விற்பனை வரத்து குறைவால் விலை எகிறியது

எலுமிச்சை பழம் ரூ.15க்கு விற்பனை வரத்து குறைவால் விலை எகிறியது


ADDED : ஏப் 06, 2024 01:13 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:தேவை அதிகரிப்பு விளைச்சல் வரத்து குறைவால் ஆண்டிபட்டியில் ஒரு எலுமிச்சை பழம் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி பகுதியில் எலுமிச்சை விளைச்சல் அதிகம் உள்ளது. மொத்த மார்க்கெட் பெரியகுளத்தில் செயல்படுகிறது.

சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களில் இப்பழங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் குளிர்பானத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

விளைச்சல் குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆண்டிபட்டியில் சில மாதங்களுக்கு முன் ஒன்று, இரண்டு ரூபாய்க்கு கூட கிடைத்த எலுமிச்சை பழங்கள் விலை தற்போது ரூ.5 முதல் 15 விலையில் உள்ளது.

வியாபாரிகள் கூறியதாவது:

தற்போது எலுமிச்சை காய்ப்புக்கான சீசன். விளைச்சல் குறைந்ததால் தினமும் 10 டன் அளவில் இருக்க வேண்டிய வரத்து 4 டன் ஆக குறைந்துள்ளது. மேலும் கிராமங்களிலும் பங்குனி பொங்கல் விழா தொடங்கியுள்ளது.

அடுத்தடுத்த கிராமங்கள் என மே மாதம் வரை இவ்விழா நடைபெறும். இதனால் இரு மாதங்களுக்கு எலுமிச்சை பழங்கள் தேவை அதிகம் இருக்கும். தற்போது கிலோ ரூ.200 வரை உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us