ADDED : ஜூலை 19, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துபட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 33. பெரியகுளம் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக் ஷன் ஏஜன்டாக பணிபுரிந்தார்.
ஜூலை 16 ல் தேனியில் கலெக் ஷன் முடித்துவிட்டு தேனி பைபாஸ் ரோட்டில் டூவீலரில் பெரியகுளம் செல்லும்போது, லட்சுமிபுரம் அருகே நாய் குறுக்கே சென்றது.
இதனால் முத்துக்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜூலை 17) இரவு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.-