/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரதமர் மோடி தமிழகம் வருவதில் தவறில்லை: நடிகர் கார்த்திக் பேட்டி
/
பிரதமர் மோடி தமிழகம் வருவதில் தவறில்லை: நடிகர் கார்த்திக் பேட்டி
பிரதமர் மோடி தமிழகம் வருவதில் தவறில்லை: நடிகர் கார்த்திக் பேட்டி
பிரதமர் மோடி தமிழகம் வருவதில் தவறில்லை: நடிகர் கார்த்திக் பேட்டி
ADDED : ஏப் 13, 2024 02:34 AM
தேனி : தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவதில் தவறில்லை. இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வரலாம் என நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் தெரிவித்தார்..
தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனரும், நடிகருமான கார்த்திக் பிரசாரம் செய்தார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: விழிப்புணர்வு ஏற்படுத்த நற்பணி மன்றம் துவங்கினேன். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை. அரசியலுக்கு தான் விளம்பரம் தேவை. தமிழகத்தில் மீண்டும் பழனிசாமி முதல்வர் ஆவார். பிரதமர் அடிக்கடி தமிழகம் வருகிறார். இந்தியர்கள் தமிழகம் வருவதில் தவறில்லை. வெள்ளையர்களாக இருந்தால் வெளியேற கூறலாம். அவரை பதவியில் இருந்து விலக கூறலாம். தேர்தல் மை அநீதிக்கு எதிராக வைக்கப்படும் மை. மீண்டும் ஒரு இந்தியருக்கு அடிமையாக கூடாது. இதற்காகவா சுதந்திரம் பெற்றோம். மக்களை குறைத்து எடைபோட கூடாது.
விவசாயிகளை தி.மு.க., மத்திய அரசு மதிக்கவில்லை. அ.தி.மு.க., விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதது கூட்டணி தர்மத்திற்காக தான். அந்த ஆதங்கம் தற்போது வெளிப்படுகிறது. அரசியிலில் சில நேரங்களில் சூழலுக்கு தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். பழனிசாமி தனியாக நின்று சாதித்துள்ளார். தற்போது கட்சத்தீவு பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, என்றார்.

