ADDED : மே 07, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் ஆண்டிபட்டி பகுதியில் கிராம தங்கல் திட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
போடிதாசன்பட்டி விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு முறை குறித்தும் அதில் வரும் வருவாய் மற்றும் பலன்கள், வளர்ப்புக்கான விதிமுறைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி செயல் விளக்கம் கொடுத்தனர்.