ADDED : ஆக 01, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
2–
மாவட்டத்தில் சில நாட்களாக காற்றில் வேகம் அதிகரித்து உள்ளது. இதனால் தேனி நகரில் சிவாஜி நகர், எம்.ஜி.ஆர்., நகர், பொம்மைகவுண்டன்பட்டி பாலன் நகர் உள்ளிட்ட இடங்களில் காயந்த மரக்கிளைகள் முறிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கிறது. நேற்று முன்தினம் என்.ஆர்.டி., நகரில் காமராஜர் பூங்கா அருகே டூவீலரில் சென்றவர் மீது மரக்கிளை விழுந்து காயம் ஏற்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் சார்பில் ரோட்டில் இடையூறாக உள்ள மரக்கிளைகள், காய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது. இதுபற்றி மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில்,‘ நகராட்சி மரக்கிளைகளை அகற்ற வேண்டும். ஆனால் நகராட்சி பணியாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. எனவே மின்வாரியம் முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகள் வெட்டப்படுகிறது’. என்றனர்.
