/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவமனையில் அலைபேசி, பணம் திருடிய இருவர் கைது
/
மருத்துவமனையில் அலைபேசி, பணம் திருடிய இருவர் கைது
ADDED : ஜூலை 22, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேனி அருகே ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் சஜய் 21.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவரது உறவினரை உடன் இருந்து கவனித்து வந்தார். மருத்துவமனை வார்டில் இவரது அலைபேசி திருடு போனது. அங்கிருந்த நந்தினி, அலைபேசி, ரூ.6000 பணம் திருடு போய்விட்டது. இதுகுறித்து சஜய் புகாரில் கண்டமனுார் போலீசார் போடியைச் சேர்ந்த விஜய் 28, தேனி அரண்மனை புதூரைச் சேர்ந்த சசிகுமார் 39, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.