ADDED : ஏப் 19, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் 36. இவர் வடக்குமலை அருகே உள்ள ஊத்தாம்பாறை பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாடு இவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.
போடி டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 65. வடக்குமலை அருகே உள்ள உலக்குருட்டி பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார்.
திடீரென வந்த காட்டுமாடு இவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். காயம் அடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

