sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இரட்டை கொலையில் 2 பேரிடம் விசாரணை

/

இரட்டை கொலையில் 2 பேரிடம் விசாரணை

இரட்டை கொலையில் 2 பேரிடம் விசாரணை

இரட்டை கொலையில் 2 பேரிடம் விசாரணை


ADDED : மார் 05, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 05, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு; தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வனப்பகுதியையொட்டி இருந்த விவசாய நிலத்தில் சில நாட்களுக்கு முன் விவசாயிகள் இருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்தவர்கள் வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 45, வருஷநாடு வைகைநகரைச் சேர்ந்த கருப்பையா 55, என தெரிந்தது. அவர்களது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்துள்ளன. தந்தை கருப்பையாவை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி மகன் சந்திரசேகரன் போலீசில் புகார் அளித்தார்.

டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடமலைக்குண்டு மேலப்பட்டியைச்சேர்ந்த கணேசன் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இக்கொலை தொடர்பாக நேற்று போலீசார் கோவில்பாறையைச் சேர்ந்த முருகன் 55, அவரது மகன் அஜித் 25, ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

மணிகண்டன், கருப்பையா உடல்கள் பிரதே பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us