ADDED : மே 26, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி,: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 43.
இவரது டூவீலரை காட்ரோடு அருகே மெக்கானிக் கடை அருகே நிறுத்துவது வழக்கம். இவரது டூவீலரை செங்குளத்துபட்டி
பால்வாடி தெருவைச் சேர்ந்த வீரபத்திரன் 20. திருடி தள்ளிச் சென்றுள்ளார்.
இதனை பாலமுருகன் பார்த்து, அருகே இருந்த சுந்தரபாண்டியன், சங்கர், பாண்டி, சீனிவாசன் உதவியுடன் வீரபத்திரனை தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., வேல் மணிகண்டன், வீரபத்திரனை கைது செய்து டூவீலர் மீட்கப்பட்டது.-