/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீர்த்த தொட்டி பராமரிப்பு இல்லாததால் சுகாதாரக்கேடு
/
தீர்த்த தொட்டி பராமரிப்பு இல்லாததால் சுகாதாரக்கேடு
தீர்த்த தொட்டி பராமரிப்பு இல்லாததால் சுகாதாரக்கேடு
தீர்த்த தொட்டி பராமரிப்பு இல்லாததால் சுகாதாரக்கேடு
ADDED : மே 26, 2024 04:36 AM

போடி,: போடி அருகே ஆறுமுக நாயனார் கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்த தொட்டி மாசடைந்து சுகாதார கேடு நிலவுவதால் சுனை நீரால் பக்தர்கள் குளிக்க சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில். ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாமல் மூலிகை கலந்த சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். மேலும் முருகன், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிய, இங்கு வந்து நீராடி செல்வர். தீர்த்த தொட்டி பகுதியில் மண் கழிவுகளால் தண்ணீர் மாசு அடைந்தும், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுகிறது. இருபாலருக்கும் தனித்தனியே சுகாதார வளாகம், உடை மாற்றும் அறை கட்டடம் உரிய பராமரிப்பு இன்றி உள்ளதால் நீராடி வரும் பெண் பக்தர்கள் உடை மாற்ற முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தீர்த்த தொட்டியை சுத்தப்படுத்தி கழிவுநீர் வெளியேற்றவும், சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.