/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பதவி உயர்வில் பாரபட்சம் வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
/
பதவி உயர்வில் பாரபட்சம் வி.ஏ.ஓ.,க்கள் புலம்பல்
ADDED : ஜூலை 04, 2024 02:38 AM
கம்பம்,:பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக வி.ஏ.ஓ.க்கள் புலம்புகின்றனர்.
வருவாய்த் துறையில் கிராம உதவியாளர், வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ., என்ற வரிசையில் பணியிடங்கள் உள்ளன. கிராம உதவியாளர்கள் ( தலையாரிகள்) 10 ஆண்டுகள் பணியாற்றினால் வி.ஏ.ஒ க்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த தேர்வும் எழுத தேவையில்லை. வி.ஏ.ஒ.,க்கள் ஆறு ஆண்டுகள் பணியாற்றினால் ஆர்.ஐ., பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் பதவி உயர்வு பெற ஆறு பாடப் பிரிவுகளில் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்றால் பதவி உயர்வு. இதில் குரூப் 2 மூலம் தேர்வாகி வருபவர்களுக்கு நியமனம் வழங்கி விட்டு கடைசியாக பதவி உயர்வு கிடைக்கும்.
பதவி உயர்வில் தங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என வி.ஏ.ஓ.க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல் பணிக்காலத்தை தகுதியாக வைத்து, தேர்வு எழுதுவதை ரத்து செய்து பதவி உயர்வு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வி.ஏ.ஓ.க்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில், ஆறு ஆண்டுகள் பணியாற்றியவருக்கு ஆர்.ஐ., 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு துணை தாசில்தார் பதவி தேர்வு எழுதாமல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.