sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மேகமலையில் கடும் குளிர், பனிமூட்டம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

/

மேகமலையில் கடும் குளிர், பனிமூட்டம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

மேகமலையில் கடும் குளிர், பனிமூட்டம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

மேகமலையில் கடும் குளிர், பனிமூட்டம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு


ADDED : ஜூன் 29, 2024 05:35 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : மேகமலையில் கடந்த சில நாட்களாக கடும்குளிர், பனி மூட்டம், சாரல் மழை என சீதோஷ்ண நிலை மாறியதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

தேனி மாவட்ட சுற்றுலா தலங்களில் மேகமலை முக்கிய இடம் பிடிக்கிறது. தேயிலை தோட்டங்கள், வன உயிரினங்களின் நடமாட்டம், ரோட்டை ஒட்டியே செல்லும் நீர்த் தேக்கம், குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை என மூணாறுக்கு இணையான சீதோஷ்ண நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்து வருகின்றனர்.

மேகமலையில் துவங்கி ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணி யாறு , இரவங்கலாறு , மகாராசா மெட்டு வரை பசுமைப் பள்ளத்தாக்காக உள்ளது. கடந்த சில நாட்களாக இப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் உச்சபட்ச கடும் குளிர், பனிமூட்டம், வானம் மேக மூட்டமாக உள்ளது. சீதோஷ்ணநிலை தலைகீழாக மாறி விட்டதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.தொடர் சாரல் காரணமாக இங்குள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இரவங்கலாறு அணையிலிருந்து எடுக்கும் தண்ணீரை பயன்படுத்தி சுருளியாறு மின் நிலையத்தில் 20 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us