ADDED : ஏப் 20, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் உள்ள 11 ஓட்டுச்சாவடிகளில் மாலை 6:00 மணிக்குள் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு செய்தது.
நேற்று நடந்த லோக்சபா தேர்தல் மாலை 6:00 மணிக்கு முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி லோக்சபா தொகுதியில் 11 ஓட்டுச்சாவடிகளில் மாலை 6:00க்கு ஓட்டளிக்க பலரும் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஆறு மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு நடந்தது. அவை சோழவந்தான் தொகுதியில் 1, ஆண்டிப்பட்டியில் 3, பெரியகுளத்தில் 2, போடியில் 5 என 11ஓட்டுச்சாவடிகளில் 6:00 மணிக்கு மேல் ஓட்டளிக்க அனுமதிக்கபப்பட்டனர். இந்த ஓட்டுச்சாவடிகளில் கடைசியாக நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு நடந்தது.

