/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அணைப்பிள்ளையார் அணையில் நீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
/
அணைப்பிள்ளையார் அணையில் நீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
அணைப்பிள்ளையார் அணையில் நீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
அணைப்பிள்ளையார் அணையில் நீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 17, 2024 06:56 AM

போடி : போடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் அணைப்பிள்ளையார் அணையில் நீர் அருவியாய் கொட்டி வருகிறது.
போடி பகுதியில் ஏப்., முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் கொட்டகுடி ஆறு நீர் வரத்து இன்றி வறண்டது. இப் பகுதி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து. தோட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் நீரின்றி வாடியதால் விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் பகுதியில் பெய்த கனமழையால் போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழை நீர் ஓடை போல பெருக்கெடுத்து சென்றது. கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து வரத் துவங்கியதை ஒட்டி போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போடி - - மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப்பகுதியில் தடுப்பணையை தாண்டி வெள்ளியை உருக்கி விட்டார் போல் நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், மக்களும் குளித்து மகிழ்கின்றனர்.

